கோவில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
திருச்சி:திருச்சி அருகே திருவானைக்காவல் பகுதியில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் திருத்தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் இருவர் தேர்சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
திருவானைக்காவலில் உள்ள அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடந்தது. சன்னதித் தெருவிலிருந்து தேர் கிளம்பியது. ஆயிரக்கணக்கானபக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்கத் தொடங்கினர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தின் நடுவே தேர் மெதுவாக நகர்ந்து வந்தது. வடக்குத் தெருவில் தேர் திரும்பியபோது, அங்கு எதிர்பாராதவகையில் பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
இதில் பல பக்தர்கள் தேருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தேர் நிறுத்தப்பட்டது. தேருக்கு அடியில் சிக்கியவர்களை வெளியேஇழுத்தனர். அப்போது இந்திராணி, சத்தியமூர்த்தி ஆகியோர் தேர் சக்கரத்தில் சிக்கி பலியாகி விட்டது தெரிய வந்தது.
மேலும் தாமோதரன் என்பவரின் கால் முறிந்து போனது. மேலும் சிலரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசுமருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications