லஷ்கர்-அமெரிக்க உதவிக்கு இந்தியா ஸாரி
டெல்லி:தீவிரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை ஒடுக்க இந்தியாவுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காதெரிவித்துள்ளது. ஆனால் இந்த உதவியை இந்தியா மறுத்து விட்டது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்பு லஷ்கர் இ தொய்பா.இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டுள்ள பல குண்டு வெடிப்புகள், நாச வேலைகளுக்கு இந்த அமைப்பே காரணம்.
இந்த நிலையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா ராணுவம் உதவத் தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.லஷ்கர் தீவிரவாதிகளை அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக அவர்களை ஒடுக்கமுடியும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த உதவியை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், நமதுநாட்டு பாதுகாப்புத் துறை மிகவும் சிறப்பாக உள்ளது. முன்பை விட தற்போது நவீன வசதிகள் உள்ளன.
தீவிரவாதிகளின் சதியை உடனுக்குடன் கண்டறியும் வகையில் நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. இதனால், அமெரிக்காவின் இந்த உதவிநமக்குத் தேவையில்லை.
மேலும், அமெரிக்கா மீது இந்திய முஸ்லீம்கள் அதிருப்தியில் உள்ளனர். இந் நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால் அரசியல்ரீதியாகவும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications