வீட்டுக்குப் போக பயப்படும் டோணி!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி:ரசிகர்களின் எதிர்ப்பு காரணமாக ஜார்க்கண்டில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்ப விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணி அஞ்சுகிறார். இதனால் சில நாட்களுக்கு டெல்லியிலேயே தங்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.

Dhoni

உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். பல்வேறு வகையான போராட்டங்களிலும் குதித்னர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து நள்ளிரவில் ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் வீடுகளுக்குச் சென்றனர்.

கங்குலிக்கு மட்டும்தான் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். மற்ற வீரர்கள் எல்லாம் வீட்டோடு முடங்கிக் கிடக்கின்றனர். இதில் டோணியின் நிலைதான் படு மோசம்.

டோணி இந்த உலகக் ேகாப்பைப் போட்டியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தவர். இதனால் அவர் மீதுதான் ரசிகர்களுக்கு கடும் கோபம். இதனால் டெல்லி வந்து சேர்ந்து விட்ட டோணி, சொந்த ஊரான ராஞ்சிக்குத் திரும்ப முடியாமல் தவிக்கிறார்.

ஏற்கனவே அவர் கட்டி வரும் வீட்டின் சுற்றுச் சுவரை ரசிகர்கள் இடித்து விட்டனர். இந்த நிலையில் ஊர் திரும்பினால் பிரச்சினை ஏற்படலாம் என அவர் அஞ்சுகிறார்.

இதன் காரணமாக டெல்லியில் உள்ள தனது நண்பரான ரஞ்சி கிரிக்ெகட் வீரர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளாராம் ேடாணி. இன்னும் சில நாட்களுக்கு அவருடன்தான் இருக்கப் போகிறார் டோணி. அதன் பின்னரே ராஞ்சி திரும்புவாராம்.

இதுகுறித்து டோணி தரப்பில் கூறுகையில், ராஞ்சிக்குத் திரும்ப டோணி ஆர்வமாகேவ உள்ளார். இருப்பினும் ரசிகர்களால் பிரச்சினை ஏற்படும் என அவர் அஞ்சுகிறார். எனவே இன்னும் சில நாட்களுக்கு அவர் டெல்லியிலேயே தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

இதற்கிடைேய, ராஞ்சிக்கு விமானம் மூலம் வராமல் கொல்கத்தா வழியாக சாைல மார்க்கமாக வர ேடாணி திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+