அடித்துக் கொள்ளும் காங்கிரஸார்-கிருஷ்ணசாமி வருத்தம்
சென்னை:காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருவதும், இதுதொடர்பாக ஆங்காங்கே நடைபெறும் மோதல்களும் மிகுந்த வருத்தம் அளிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகப் பதவியேற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நல்ல நாளில் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சி மலர உறுதி எடுப்போம்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஆங்காங்கே நடைபெறும் மோதல்கள் குறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் கட்சியின் பெயர் கெடுவதோடு, கட்சி வளர்ச்சிக்கும் ஊறு நேர்ந்து விடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடற்ற போக்கை அனுமதிக்க முடியாது. சோனியா காந்தியின் கரத்தை பலப்படுத்துகிற வகையில்தான் காங்கிரஸார் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக யாரும் செயல்படக் கூடாது, அதற்கு அனுமதியும் கிடையாது.
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் போட்டியிடும். அங்கு வெற்றியும் பெறுவோம் என்றார் கிருஷ்ணசாமி. சமீபத்தில் நெல்லைக்கு கிருஷ்ணசாமியும், மத்திய அமைச்சர் இளங்கோவனும் சென்றபோது அவர்கள் கண் முன்பாகவே வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை இளங்கோவன் கோஷ்டியினர் நையப்புடைத்த சம்பவம் நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications