போலி போஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரத்தை சேர்ந்தவர் சென்னிமலை. இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். தன் தாயரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரைப் பார்க்க இந்தியாவுக்கு வந்தார்.
பின்னர் மீண்டும் துபாய் செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அது போலி என தெரிய வந்தது.
இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் சென்னிமலையைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications