பேசக் கூட மறுத்த சேப்பல்: சச்சின் புகார்
மும்பை:உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களிடம் பேசக் கூட மறுத்தார் கிரேக் சேப்பல். இப்படிப்பட்டவர் அணியின் மூத்த வீரர்கள் குறித்து புகார் கூறியுள்ளது வருத்தம் தருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்கள் மாபியா கும்பல் போல செயல்படுகின்றனர். இளம் வீரர்களை அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கங்குலியுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவேன் என சச்சின் பிடிவாதம் பிடித்துள்ளார். யுவராஜ் சிங், ஷேவாக் ஆகியோர் தங்களை நட்சத்திர வீரர்களை போல் நினைத்துக் கொண்டு அகம்பாவத்துடன் நடந்தது கொண்டுள்ளனர் என்று சேப்பல் வாரியத்திற்கு வழங்கத் தயாரித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக நேற்று சச்சின் வாய் திறந்தார்.
சச்சின் கொடுத்த பேட்டியில், உலகக் கோப்பையை வெல்வது எங்களது லட்சியமாக இருந்தது. இந்த தோல்வி என் 17 வருட அனுபவத்தில் மிகவும் சோகமான தருணமாக அமைந்து விட்டது.
கடந்த 17 வருடங்களாக இந்திய அணிக்காக ஆத்மார்த்தமாக விளையாடியுள்ளேன். என்னைப் பற்றி இதற்கு முன்பு இருந்த எந்தப் பயிற்சியாளரும் குறை கூறியதில்லை.
பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மூத்த வீரர்கள் மாபியா கும்பல் என்று கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் சச்சின்.
விளக்கம் கேட்கும் வாரியம்:
இதற்கிடையே சேப்பல் வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில் மூத்த வீரர்களிடம் விளக்கம் கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுக்குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய இணைச்செயலாளர் பாண்டவ் கூறுகையில், முதலில் உலக கோப்பை தோல்வி குறித்தும், சேப்பல் மற்றும் அணி மேலாளர் ஜக்தலே ஆகியோரின் அறிக்கை குறித்தும் முன்னாள் கேப்டன்களுடன் விரிவாக ஆலோசிப்போம்.
அவசியம் இருந்தால் சீனியர் வீரர்களிடம் விளக்கம் கேட்போம். 6ம் தேதி சேப்பல், ஜக்டலே, டிராவிட் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications