பேசக் கூட மறுத்த சேப்பல்: சச்சின் புகார்
மும்பை:உலகக் கோப்பைப் போட்டியின்போது வீரர்களிடம் பேசக் கூட மறுத்தார் கிரேக் சேப்பல். இப்படிப்பட்டவர் அணியின் மூத்த வீரர்கள் குறித்து புகார் கூறியுள்ளது வருத்தம் தருகிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்கள் மாபியா கும்பல் போல செயல்படுகின்றனர். இளம் வீரர்களை அவர்கள் மிரட்டுகிறார்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், கங்குலியுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவேன் என சச்சின் பிடிவாதம் பிடித்துள்ளார். யுவராஜ் சிங், ஷேவாக் ஆகியோர் தங்களை நட்சத்திர வீரர்களை போல் நினைத்துக் கொண்டு அகம்பாவத்துடன் நடந்தது கொண்டுள்ளனர் என்று சேப்பல் வாரியத்திற்கு வழங்கத் தயாரித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகக் கோப்பைப் போட்டித் தோல்விக்குப் பின்னர் முதல் முறையாக நேற்று சச்சின் வாய் திறந்தார்.
சச்சின் கொடுத்த பேட்டியில், உலகக் கோப்பையை வெல்வது எங்களது லட்சியமாக இருந்தது. இந்த தோல்வி என் 17 வருட அனுபவத்தில் மிகவும் சோகமான தருணமாக அமைந்து விட்டது.
கடந்த 17 வருடங்களாக இந்திய அணிக்காக ஆத்மார்த்தமாக விளையாடியுள்ளேன். என்னைப் பற்றி இதற்கு முன்பு இருந்த எந்தப் பயிற்சியாளரும் குறை கூறியதில்லை.
பயிற்சியாளர் கிரேக் சேப்பல் மூத்த வீரர்கள் மாபியா கும்பல் என்று கூறியிருப்பது மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக இருக்கிறது.
உலகக் கோப்பை போட்டியின்போது வீரர்கள் யாரிடமும் அவர் பேசவே இல்லை. நாங்கள் ஏதாவது கருத்து கூறினால் அதை ஏற்க மறுத்தார். பயிற்சியாளரே இப்படி நடந்து கொண்டால், எப்படி வீரர்களால் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறியுள்ளார் சச்சின்.
விளக்கம் கேட்கும் வாரியம்:
இதற்கிடையே சேப்பல் வழங்கியுள்ள அறிக்கையின் அடிப்படையில் மூத்த வீரர்களிடம் விளக்கம் கேட்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுக்குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய இணைச்செயலாளர் பாண்டவ் கூறுகையில், முதலில் உலக கோப்பை தோல்வி குறித்தும், சேப்பல் மற்றும் அணி மேலாளர் ஜக்தலே ஆகியோரின் அறிக்கை குறித்தும் முன்னாள் கேப்டன்களுடன் விரிவாக ஆலோசிப்போம்.
அவசியம் இருந்தால் சீனியர் வீரர்களிடம் விளக்கம் கேட்போம். 6ம் தேதி சேப்பல், ஜக்டலே, டிராவிட் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்றார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications