மீனவர்களுக்கு வழிகாட்ட கடலில் விளக்கு: அமைச்சர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை விட்டு இலங்கை கடல் எல்லைக்குள் சென்று விடாமல் தடுக்க, மீனவர்களுக்கு வழி காட்ட கடலில் மிதவை விளக்குகள் மிதக்க விடப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியுள்ளார்.

சட்டசபையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மீனவர்களுக்கு வழிக்காட்டும் பொருட்டு கடல் எல்லை பகுதிகளை அறியும் வகையில் விளக்குகளுடன் கூடிய மிதவைகள் அமைக்கப்படும்.

இதற்கு ரூ.3 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் கோரப்பட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. இதனால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மீண்டும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான செலவு குறித்து தேசிய கப்பல் தொழில் நுட்ப நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். அவர்களிடமிருந்து விவரம் கிடைத்ததும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் மீனவர்கள் நமது நாட்டு எல்லையை கடந்தால் எச்சரிக்கை செய்து அவர்களை உஷார்படுத்தும் அதி நவீன கருவிகளையும் தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+