குடித்ததைக் கண்டித்த மனைவி எரித்துக் கொலை
மதுரை:குடிப்பதைக் கண்டித்த மனைவியை மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பழங்கநாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (34). இவரது மனைவி மலர்விழி (32). தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம் ஜெயபாலன். இதை மலர்விழி தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த ஜெயபாலன், நேற்று இரவு தனது மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார்.
தீயின் வெம்மை தாங்க முடியாமல் அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தார் மலர்விழி. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மலர்விழி இறந்து போனார்.
மலர்விழி, ஜெயபாலன் தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளார். தப்பி ஓடி விட்ட ஜெயபாலனை ஆண்டாள்புரம் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications