யாத்திரை-அனைத்து மதத்தினருக்கும் அரசு நிதியுதவி
டெல்லி:முஸ்லீம்களின் ஹஜ் பயணத்திற்கு மானியம் (நிதியுதவி) அளிப்பது போல் அனைத்து மதத்தினரும் புனித யாத்திரை மேற்கொள்ளும் போதும் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மதசார்பற்ற இந்திய நாட்டில் முஸ்ஸீம்களுக்கு மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதியுதவி வழங்குவது சரியல்ல என்றும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் பிரபு கராடியா என்பவர் பொது நல மனு ஒன்றை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், ஹஜ் பயணத்திற்கான அரசு நிதியுதவிக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீசில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் தருவதுபோல், வேறு எந்த மத யாத்திரைக்காவது நிதியுதவி அளித்துண்டா என கேள்வி எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.
இதற்கு வெளியுறவு துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஹஜ் யாத்திரிகள் போல் மற்ற மதத்தினரும் மேற்கொள்ளும் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிக்க அரசு தயக்கம் காட்டவில்லை.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு மானிய உதவி அளிப்பதால் மதசார்பற்ற தன்மை போய்விட்டது என மனுதாரர் கூறியுள்ளது ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் காசி, ராமேஸ்வரம், கைலாஷ், மானசரோவர், கும்ப மேளா போன்ற புனித யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் அரசு நிதியுதவி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications