மனநலம் பாதித்த 3 குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை
வேலூர்:மன நலம் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகளை குளத்தில் வீசிக் கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அய்யப்பன் (6), மோகன் ராஜன் (5), ப்ரிய தர்ஷினி (3) என 3 குழந்தைகள் இருந்தனர்.
மூன்று பேருக்குமே மன நல பாதிப்பு இருந்ததால், முருகன் தம்பதியினர் மனம் உடைந்தனர். குறிப்பாக லட்சுமி மிகுந்த மன வேதனை அடைந்தார். மன நலம் இன்றி அவதிப்படுவதை விட 3 பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தார்.
கடந்த ஆண்டு மே 25ம் தேதி 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வேலூர் மாவட்டம் சோளிங்கருக்குச் சென்றார். அங்கு சென்ற பின்னர் ஆட்டோ மூலம் தக்கான்குளம் என்ற கிராமத்திற்குச் சென்றார்.
கிராமத்துக்கு வெளியே உள்ள குளத்தைப் பார்த்த அவர் அங்கு சென்று தனது மூன்று பிள்ளைகளையும் அடுத்தடுத்து குளத்தில் வீசினார். பின்னர் தானும் குதித்தார்.
அவர்களின் அலறலைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நான்கு பேரையும் மீட்டனர். ஆனால் லட்சுமியை மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது. மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்து போயினர்.
லட்சுமியைக் கைது செய்த போலீஸார் அவர் மீது வேலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று லட்சுமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications