ஆங்கில பள்ளிகளுக்கு அரசே தமிழ் புத்தகங்கள் வழங்க முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:அனைத்து ஆங்கில பள்ளிகளுக்கும் தமிழ் பாட புத்தகங்களை அரசே வழங்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆரம்ப பள்ளிகல்வி மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பாமகவின் ஜி.கே.மணியின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

திமுக ஆட்சியில் தான் ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஆரம்ப பள்ளிக் கூடங்களுக்கு கட்டிட வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர உள்ளாட்சித்துறை அமைச்சரும் மாபெரும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளார். இதற்காக கரூ.138 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக் கூடங்களில் தான் அதிக மாணவர்கள் படிக்கின்றனர்.

20 சதவீதம் பேர் தான் தனியார் பள்ளியில் படிக்கின்றனர்.

ஆங்கிலப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் தமிழும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவுபடி வரும் கல்வியாண்டு முதல் அனைத்து ஆங்கில பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவர்களுக்கும் தமிழ் பாட நூல்களை அரசே வழங்கும் என்றார் தென்னரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+