முதலில் நடுவர் மன்றத்தை அணுகுவது ஏன்?:அதிமுக கேள்வி-கருணாநிதி பதில்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்திலேயே மேல் முறையீடு செய்யப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரவே 16 ஆண்டுகள் காத்திருக்க ேவண்டியதாகி விட்டது. இந் நிைலயில் மீண்டும் நடுவர் மன்றத்திடமே மேல் முறையீடு செய்வதால் நமக்குத்தான் பாதகம் ஏற்படும்.
கர்நாடக அரசு நேரடியாக உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளது. அதுேபாலவே தமிழகமும் நேரடியாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி,
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் நெஞ்சறிய தவறான கருத்தை சொல்லக் கூடாது.
எல்லோரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்ேதாம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலில் நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்வது பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வதுதான் சரி என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நீங்கள் வேறு யாரிடமோ மாட்டிக் ெகாண்டு இப்போது மாற்றிச் சொல்கிறீர்கள். இப்படி தலைகீழாக, கற்பனையாக, புதிதாக பேசுவது முறையல்ல.
இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளில் குழப்பம் ஏற்பட்டது, தமிழகமே இரண்டுபட்டுக் கிடக்கிறது என்ற செய்தி கர்நாடகத்திற்குப் ேபாய் விடக் கூடாது. கர்நாடகம் இப்ேபாது என்ன செய்துள்ளது என்றால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வது, நடுவர் மன்றத்திலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்வது என்று முடிவெடுத்துள்ளது.
அதைத்தான் தமிழகமும் செய்யவுள்ளது.
நாம் உச்சநீதிமன்றம் ெசன்றால் நீதி கிடைக்க மேலும் 50 ஆண்டுகள் ஆகி விடும். நாம் நடுவர் மன்றத்தை அணுகுவது நமது நன்மைக்காகத்தான். எனவே முதலில் நடுவர் மன்றத்தை அணுகி மனு செய்யவுள்ளோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் கருணாநிதி.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
பச்சைக் கொடி காட்டிட்டாரா விஜய்? பவன் கல்யாண் சொன்ன "நீங்க பாதி.. ஆனாலும் யாருமே எதிர்பாராத சிக்கல் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications