முதலில் நடுவர் மன்றத்தை அணுகுவது ஏன்?:அதிமுக கேள்வி-கருணாநிதி பதில்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்திலேயே மேல் முறையீடு செய்யப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வரவே 16 ஆண்டுகள் காத்திருக்க ேவண்டியதாகி விட்டது. இந் நிைலயில் மீண்டும் நடுவர் மன்றத்திடமே மேல் முறையீடு செய்வதால் நமக்குத்தான் பாதகம் ஏற்படும்.
கர்நாடக அரசு நேரடியாக உச்சநீதிமன்றத்தில் முறையிடவுள்ளது. அதுேபாலவே தமிழகமும் நேரடியாக உச்சநீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த கருணாநிதி,
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் நெஞ்சறிய தவறான கருத்தை சொல்லக் கூடாது.
எல்லோரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்ேதாம்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலில் நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்வது பிறகு தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வதுதான் சரி என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் நீங்கள் வேறு யாரிடமோ மாட்டிக் ெகாண்டு இப்போது மாற்றிச் சொல்கிறீர்கள். இப்படி தலைகீழாக, கற்பனையாக, புதிதாக பேசுவது முறையல்ல.
இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளில் குழப்பம் ஏற்பட்டது, தமிழகமே இரண்டுபட்டுக் கிடக்கிறது என்ற செய்தி கர்நாடகத்திற்குப் ேபாய் விடக் கூடாது. கர்நாடகம் இப்ேபாது என்ன செய்துள்ளது என்றால் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்வது, நடுவர் மன்றத்திலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்வது என்று முடிவெடுத்துள்ளது.
அதைத்தான் தமிழகமும் செய்யவுள்ளது.
நாம் உச்சநீதிமன்றம் ெசன்றால் நீதி கிடைக்க மேலும் 50 ஆண்டுகள் ஆகி விடும். நாம் நடுவர் மன்றத்தை அணுகுவது நமது நன்மைக்காகத்தான். எனவே முதலில் நடுவர் மன்றத்தை அணுகி மனு செய்யவுள்ளோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் கருணாநிதி.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி












Click it and Unblock the Notifications