வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க மறு வாய்ப்பு
சென்னை:வேலை வாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில்,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். கடந்த 2006ம் ஆண்டு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆணை வெளியிடப்பட்டு, அன்றிலிருந்து 3 மாதங்களுக்குள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆன, 60 வயது கடந்தவர்களுக்கும், நோயினால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய இயலாதவர்களுக்கான மாத ஓய்வுதிய தொகை மாதம் ரூ.300 லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படுகிறது. இதே போல் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் ரூ.400 ஆக உயர்த்தப்படுகிறது.
தொழிலாளர் நல வாரிய குழந்தைகள் காப்பகத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, ஆகிய இடங்களில் மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் இயங்கி வருகின்றன.இதில் மதுரை மண்டலத்திலுள்ள 16 மாவட்டங்களைப் பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஒரு மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications