கோவை-முதியவரை தாக்கி கொன்ற 13 யானைகள்
கோவை:கோவை அருகே நாட்ராயன் வனப் பகுதியில் காட்டுக்குள் விறகு பொறுக்க சென்ற முதியவரை 13 யானைகள் சூழ்ந்து தாக்கிக் கொன்றன.
கோடை காலம் வந்து விட்டதால் கோவை மாவட்ட காட்டுப் பகுதியிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக கிராமங்களுக்குள் வந்து வந்து ெசல்கின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் துடியலூர் அருேக உள்ள நாட்ராயன் மலைப் பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் கருப்பசாமி (55) என்பவர் காட்டுக்குள் நேற்று மாலை விறகு பொறுக்கச் ெசன்றார்.
அப்போது யானைக் கூட்டத்திடம் சிக்கிக் ெகாண்டார். 13 யானைகள் அவரைச் சூழ்ந்து கொண்டன. யானைகளைப் பார்த்த கருப்பசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் யானைகள் அவரை விரட்டின.
வேகமாக ஓடியபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார் கருப்பசாமி. இது யானைகளுக்கு வசதியாகப் போய் விட்டது. கூட்டமாக சூழ்ந்து ெகாண்டு கருப்பசாமியைத் தாறுமாறாக மிதித்தன.பின்னர் அவரைத் தூக்கி அருகில் இருந்த பாறையில் அடித்து ெகாடூரமாக கொன்றன அந்த யானைகள். பின்னர் காட்டுக்குள் யானைகள் போய் விட்டன.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நீண்ட காலமாக யானைகள் ஊருக்குள் வருவதும், அவற்றிடம் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி விட்டது. எனவே இதற்கு ஒரு முடிவு கட்டும் வரை கருப்பசாமியின் உடலை எடுக்க விட மாட்ேடாம் என அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் அதிகாரிகள் சமாதானம் செய்து கருப்பசாமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.












Click it and Unblock the Notifications