சீனக் குழுவுக்கு எதிர்ப்பு-திபெத்தியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:சீன குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் இன்று திபெத்தியர்கள் கடையடைப்பு நடத்தி போராட்டம் நடத்தினர்.
இந்திய, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு கூட்டு நடவடிக்கைக் குழு பேச்சு நடத்தி வருகிறது. டெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் குன்னூரில் 2 நாள் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
இன்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த நிலையில், சீனக் குழுவினரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் திபெத்தியர்கள் இன்று ஊட்டியில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
ஊட்டி, குன்னூரில் உள்ள திபெத்தியர்கள் நடத்தி வரும் நூற்றுக்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஸ்வெட்டர், கம்பளி, குல்லா போன்றவற்றின் விற்பனை பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications