தமிழ் எம்பிக்களுக்கு கருணா கொலை மிரட்டல்?
கொழும்பு:இலங்கையிலுள்ள தமிழ் எம்பிக்களுக்கு கருணா கோஷ்டியிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான மானவசேனாதிராசா எம்.பி. கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா கோஷ்டியிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களுக்கு தொடர்ந்து கொலைமிரட்டல் வந்துக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பதவி விலக்க வேண்டும் என பலமுறை கருணா கோஷ்டியினர் தொலைப்பேசியில் மிரட்டி வருகின்றனர்.
இதனால் எம்பிக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என சபாநாயகருக்கும், அரசுக்கும் கடிதம் எழுதினோம். ஆனால் இலங்கை அரசு பெரிதாக கருதாமல் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இலங்கை அரசுடன் இணைந்து தான் கருணா கோஷ்டி இயங்கி வருவது எங்களுக்கு தெரியும். எங்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களுக்கும், ஏற்படும் ஆபத்துகளுக்கும் இலங்கை அரசுதான் பொறுப்பு.
இடம் பெயர்ந்து சென்ற தமிழர்களின் முகாம்களில் கருணா கோஷ்டியினரும் ஊடுருவியுள்ளனர். இதனால் முகாம்களுக்கு சென்று மக்களை பார்க்க கூட முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.
இது மட்டுமில்லாமல் கருணா கோஷ்டியினர் தமிழர்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.