தேசியக் கொடிக்கு இன்சல்ட்: சச்சினை விசாரிக்கக் குழு

Subscribe to Oneindia Tamil

பத்வானி (மகாராஷ்டிரா): தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து சச்சின் டெண்டுல்கரிடம் விசாரணை நடத்த தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றது. அங்கு தங்கியிருந்த போது சச்சின் டெண்டுல்கர் நமது நாட்டு தேசியக் கொடியின் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தேசியக் கொடியை சச்சின் அவமதித்து விட்டார் என்று கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹித்தேஸ் சேத் என்பவர் பத்வானி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விசாரணை நடத்தி மே 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் படி போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக சச்சின் மீது வழக்கு தொடர்ந்த ஹித்தேஸ் சேத்திடம் வாக்குமூலம் பெற்று பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேலும் தகவல்களை பெற்ற பின் சச்சினிடம் விசாரணை நடத்த தனிப்படை அனுப்பப்படும் என மாவட்ட எஸ்.பி தினேஷ் சர்மா கூறியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+