பிரபாகரனை கைது செய்ய காங். கோரிக்கை
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார்.
சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதை செயல்படுத்த தமிழக காவல்துறை இந்த காலகட்டங்களில் எடுத்த நடவடிக்கை என்ன?
சட்டம் செயலிழந்து கிடக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மத்திய அரசு உடனடியாக இன்டர்போல் உதவியுடன் பிரபாகரனை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணைக்கு அவரை உட்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐயும் தூங்கிக் கொண்டிருக்கிறது. முற்றிலும் செயலிழந்து கிடக்கிறது.
முதல்வர் கருணாநிதி, பிரபாகரனுக்கு எதிராக நிலுவையில் உள்ள பிடிவாரண்ட்டை செயல்படுத்த முனைய வேண்டும்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் கடந்த 3 மாதங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது பல இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் அலுமினிய குண்டுகள், இரும்பு உருளைகள் மற்றும் டெட்டனேட்டர்கள், ஏ.கே.56 துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்டவை பிடிபட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் தொடர்புடைய 17 சம்பவங்கள் நடந்துள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தை தங்களது தளமாக புலிகள் பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
புலிகள் அமைப்புக்கு உதவும், ஆதரவு தரும் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மீது தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், தடை விதிக்க வேண்டும்.
புலிகள் அமைப்புக்கு ஆதரவு தருவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பிரயோகித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications