Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

14 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு:சென்னையில் 40 வயது பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:14 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக 40 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரில் வசிப்பவர் முனுசாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் சுசீலா (40). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நாராயணன். டெய்லராக உள்ளார்.

இவருக்கு செந்தில்குமார் என்ற 14 வயது மகன் உள்ளான். இவன் படிக்காமல், வேலைக்கும் போகாமல் அப்பகுதி சிறுவர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி வருகிறான்.

இந்த நிலையில் நேற்று இரவு இவனது பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் கொட்டியது. வலியால் துடித்த சிறுவனை பெற்றோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

என்ன நடந்தது என்று டாக்டர்கள் கேட்டபோது, பக்கத்து வீட்டு சுசீலா அக்கா தன்னைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிவித்தான் செந்தில்குமார். இதைக் கேட்டதும் டாக்டர்களும், செந்தில்குமாரின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து செந்தில்குமாரின் தந்தை நாராயணன் போலீஸில் புகார் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த போலீஸார் விரைந்து சென்று சுசீலாவிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்று முதலில் சுசீலா மறுத்தார். ஆனால் பின்னர் ஒத்துக் கொண்டார்.

இதையடுத்து சுசீலாவை போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+