For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டடம்:பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இடிகிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தமிழக சட்டசபைக்கான புதிய கட்டடம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் அமையவுள்ளது.

இதற்காக அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் மற்றும் சிபிசிஐடி தலைமையகம் ஆகியவை இடிக்கப்படவுள்ளன.

ஓமந்தூரார் எஸ்டேட் என்று அழைக்கப்படும் இந்த அரசினர் தோட்டம் இப்போதைய தலைமைச் செயலகத்தில் இருந்து சில கி.மீ. துரத்தில் தான் உள்ளது.

தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் கருணாநிதி கடந்த 12ம் தேதி அறிவித்தார். கல்லூரிகளையோ, பல்கலைக்கழங்களையோ இடித்துத் தள்ளாமல் (ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு சட்டசபை கட்ட ஜெயலலிதா முயன்றது நினைவிருக்கலாம்) யாருக்கும் தொந்தரவு தராமல் ஒரு இடத்தில் சட்டசபை கட்டப்படும் என கருணாநிதி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படுவதால் இந்த தோட்டத்தில்உள்ள ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும். அவற்றை இடிக்காமல் பாதுகாப்போம். அதே போல இங்கு கட்டப்பட்ட புதிய எம்எல்ஏ ஹாஸ்டலுக்கும் பாதிப்பு வராது என்று கூறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X