அரசினர் தோட்டத்தில் புதிய சட்டசபை கட்டடம்:பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் இடிகிறது
சென்னை:தமிழக சட்டசபைக்கான புதிய கட்டடம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் தோட்டத்தில் அமையவுள்ளது.
இதற்காக அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் மற்றும் சிபிசிஐடி தலைமையகம் ஆகியவை இடிக்கப்படவுள்ளன.
ஓமந்தூரார் எஸ்டேட் என்று அழைக்கப்படும் இந்த அரசினர் தோட்டம் இப்போதைய தலைமைச் செயலகத்தில் இருந்து சில கி.மீ. துரத்தில் தான் உள்ளது.
தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என முதல்வர் கருணாநிதி கடந்த 12ம் தேதி அறிவித்தார். கல்லூரிகளையோ, பல்கலைக்கழங்களையோ இடித்துத் தள்ளாமல் (ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு சட்டசபை கட்ட ஜெயலலிதா முயன்றது நினைவிருக்கலாம்) யாருக்கும் தொந்தரவு தராமல் ஒரு இடத்தில் சட்டசபை கட்டப்படும் என கருணாநிதி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டுவது என முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படுவதால் இந்த தோட்டத்தில்உள்ள ராஜாஜி ஹால், கலைவாணர் அரங்கம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும். அவற்றை இடிக்காமல் பாதுகாப்போம். அதே போல இங்கு கட்டப்பட்ட புதிய எம்எல்ஏ ஹாஸ்டலுக்கும் பாதிப்பு வராது என்று கூறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது..
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications