தா.கி கொலை வழக்கை பெங்களூருக்குமாற்ற கோரி மனு- அழகிரிக்கு புதிய சிக்கல்
டெல்லி:தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
திமுகவின் மூத்த தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் உட்கட்சி சண்டையால் மதுரையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுரேஷ் குமார் என்ற கிரம்மர் சுரேஷ் ச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அழகிரி முதல்வரின் மகன் ஆவார். அவருக்கு பலமான அரசியல் செல்வாக்கு உள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை மதுரையில் நடந்தால் எந்த சாட்சியும் பயமின்றி சாட்சி சொல்ல முன் வரமாட்டார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி மதுரையில் அழகிரியின் 56வது பிறந்த நாள் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.அதில் கருணாநிதியும், அமைச்சர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதனால் அழகிரிக்கு எதிரான வழக்கு விசாரணை மதுரையில் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. இதனால் வழக்கை பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அப்போது தான் நியாயமாகவும் நேர்மையாகவும் வழக்கு விசாிரக்கப்படும் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பான், சிருபுகர் ஆகியோர் மதுரை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் தமிழக அரசுக்கு பதில் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications