தா.கி கொலை வழக்கை பெங்களூருக்குமாற்ற கோரி மனு- அழகிரிக்கு புதிய சிக்கல்
டெல்லி:தா.கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணையை பெங்களூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் மதுரை நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
திமுகவின் மூத்த தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் உட்கட்சி சண்டையால் மதுரையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த வழக்கு விசாரணை மதுரையில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந் நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுரேஷ் குமார் என்ற கிரம்மர் சுரேஷ் ச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அழகிரி முதல்வரின் மகன் ஆவார். அவருக்கு பலமான அரசியல் செல்வாக்கு உள்ளது. இந்த கொலை வழக்கு விசாரணை மதுரையில் நடந்தால் எந்த சாட்சியும் பயமின்றி சாட்சி சொல்ல முன் வரமாட்டார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி மதுரையில் அழகிரியின் 56வது பிறந்த நாள் மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.அதில் கருணாநிதியும், அமைச்சர்களும், உயர் போலீஸ் அதிகாரிகளும், அரசு வழக்கறிஞர்களும், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதனால் அழகிரிக்கு எதிரான வழக்கு விசாரணை மதுரையில் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. இதனால் வழக்கை பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். அப்போது தான் நியாயமாகவும் நேர்மையாகவும் வழக்கு விசாிரக்கப்படும் என்று கூறியுள்ளார் சுரேஷ்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பான், சிருபுகர் ஆகியோர் மதுரை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் தமிழக அரசுக்கு பதில் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications