சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:சேது சமுத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தண்டி சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யானந்த பரத்ஜி மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், இந்து புராணங்களின்படி சீதையை மீட்க இலங்கை செல்ல ராமர், வானர சேனைகளின் உதவியுடன் பாலம் கட்டினார். அந்தப் பாலம் பாம்பன் அருகே கடலுக்கடியில் உள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தின் தற்போதைய வழியில், ராமர் பாலம் உள்ளால் அந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் பாலம் அழியும் நிலை உள்ளது. சுனாமி தாக்குதலின்போது இந்தப் பாலம்தான் ராமேஸ்வரத்தைக் காப்பாற்றியது.
ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இது ஆதம் பாலம் என்று அழைக்கப்பட்ட போதிலும், மதம் மற்றும் புராண ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாலத்தை அழித்தால் அது இந்துக்களின் மத உணர்வுகளைப் பாதிக்கும்.
எனவே இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். திட்டம் பற்றி ஆராய பூகோள அமைப்புகள், இயற்கை வளம், மண்ணியல், வானிலை, கடலியல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் சுனாமி குறித்த அறிவு நிறைந்த நிபுணர்களைக் கொண்ட கமிட்டியை அமைக்க உத்தரவிட வேண்டும்.
உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இந்த பாலத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரிஜித் பச்சாயத், டி.கே. ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது, இதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications