ஓட்டிக் கொண்டே பேச்சு: டிரைவிங் லைசன்ஸ் ரத்து
தென்காசி:செல்போனில் பேசியபடி மோட்டார் சைக்கிளில் சென்றவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
செல்போனில் பேசியபடி வாகனங்கள் ஓட்டக்கூடாது, மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவின்படி முதல் முறையாக நெல்லை மாவட்டம் தென்காசியில் ஒருவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி டிஎஸ்பி மயிலவாகனன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தென்காசியில் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் 4 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அதில் ஆயக்குடியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பவரின் ஓட்டுனர் உரிமம் முதலில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில், 17 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications