இன்று பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் விநியோகம்
சென்னை:பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் இன்று முதல் அந்தந்த பள்ளிளில் விநியோகிக்கப்படுகிறது.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. 25ம் தேதி மதிப்பெண் பட்டியல்கள் அந்தந்த பள்ளிகளில் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து.
அதன்படி இன்று முதல் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல்களை மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளளாம்.
2 நாட்களுக்கு முன்பு மதிப்பெண் பட்டியல்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணியை சென்னையில் உள்ள தேர்வுகள் இயக்குநரகம் தொடங்கியது.
முதலில் தென் மாவட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. நேற்று சென்னை முதல் திருச்சி வரையிலான மாவட்டங்ளுக்கான மதிப்பெண் பட்டியல்கள் விநியோகிக்கப்பட்டன.
இன்று பிற்பகல் முதல் மதிப்பெண் பட்டியல்களை மாணவ, மாணவியர் பெற்றுக் கொள்ளளாம் என தேர்வுகள் இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications