For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெலட்டின் மூடைகளுடன் சென்ற இருவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி:ஜெலட்டின் மற்றும் டெட்டனேட்டர்களை மூட்டைகளாக கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூர் மேட்டுகாடு பகுதியில் சந்திரசேகரன் (28) என்ற விவசாயி, தன்னுடைய மோட்டார் சைக்கிளில் 55 டெட்டனேட்டர் மற்றும் 110 ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்தார்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் புதுரோட்டை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவர், ராமபட்டினத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தோட்டத்திற்கு அந்த வெடிபொருட்களை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார்.

இதையடுத்து சந்திரசேகரன், பழனிச்சாமி ஆகியோரை போலீஸார் கைது செய்து, உரிமம் இல்லாமல் வெடிபொருட்கள் வைத்திருந்ததாகவும், கடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X