For Daily Alerts
Just In
மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பணம் திருட்டு
சென்னை: சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம் திருடப்பட்டது.
சென்னை தியாகராய நகர் வைத்தியராம் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இரவில் 2 ஊழியர்கள் படுத்துத் தூங்குவது வழக்கம்.
வழக்கம் போல நேற்று முன்தினம் இரவும் இரண்டு ஊழியர்கள் படுத்துத் தூங்கினர். காலையில் எழுந்து பார்த்தபோது அலுவலக பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் பணமான ரூ. 10,200 பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
இக்கட்சியின் அலுவலக செயலாளர் ரமணி போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
chennai சென்னை tamil nadu மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் theft ஊழியர்கள் labour thatstamil office கட்சி அலுவலகம் tamilnadu tamil news tn political
Story first published: Sunday, May 27, 2007, 5:30 [IST]