For Daily Alerts
Just In
சேலம் ரயில் கோட்ட கட்டடத்திற்கு பூமி பூஜை
சேலம்:சேலம் ரயில்வே கோட்டத்திற்கான புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
பாலக்காடு கோட்டத்தைப் பிரித்து, சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் தற்காலிக அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
ரயில்வே கோட்டத்துக்கான அலுவலகங்களைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் முடியும் வரை, கோடத்திற்குத் தேவையான அலுவலகத்தைக் கட்டத் திட்டமிடப்பட்டது.
இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. விரைவில் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்படும். சென்னையைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் ரூ. 2.11 கோடி மதிப்புக்கு கட்டுமானப் பணிக்கான டெண்டரை எடுத்துள்ளார்.
tamil nadu சேலம் thatstamil railway Pooja construction அலுவலகம் work tamilnadu பூஜை பூமி கட்டுமானப் பணி tamil news tn political division
Story first published: Sunday, May 27, 2007, 5:30 [IST]