ஹனிமூன் கொலை வழக்கு-டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம்
மூணாறு:மூணாறு தேன்னிலவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வித்யா குறித்து அவரை பரிசோதித்த டாக்டர் பரபரப்பு வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த அனந்தராமன் தனது மனைவி வித்யாவுடன் கேரள மாநிலம் மூணாறுக்கு தேனிலவுக்காக சென்றார். அங்கு வைத்து அனந்தராமனை வித்யா தனது கள்ளக் காதலன் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளி அன்புராஜ் ஆகியோரை வைத்து கொலை செய்தார்.இதுகுறித்து மூணாறு போலீஸார் வித்யா, ஆனந்த், அன்புராஜ் ஆகியேறை கைது செய்தனர்.
விசாரணையில் தனது பள்ளிக் காதலன் ஆனந்துடன் பலமுறை உல்லாசமாக இருந்ததும், ஆனந்தை மறக்க முடியததாலும் ஆனந்தின் உதவியுடன் தனது கணவர் அனந்தராமனை திட்டமிட்டு கொலை செய்ததாக வித்யா கூறினார்.
இதையடுத்து மூவரையும் கேரள மாநிலம் தேவிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவாற்றுபுழா சப்-ஜெயிலில் அடைத்தனர் கேரள போலீசார்.
தற்போது இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தொடுபுழா விரைவு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.
வித்யாவை பரிசோதனை செய்த கோதமங்கலம் அரசு மருத்துவமனை டாக்டர் பிரேமலதா மற்றும் திருச்சூர் பிஎஸ்என்எல் அதிகாரி மகேஷ் உள்பட மூன்று பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது, பிரேமலாதா கூறியதாவது,
வித்யா தனது காதலன் ஆனந்துடன் மூன்று ஆண்டுகளில் பலமுறை உடல் ரீதியாக உறவு வைத்து கொண்டுள்ளார். இதனால் மூன்று முறை கர்ப்பமடைந்து கருக்கலைப்பு செய்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications