கருணாநிதி-ஜெ. ரகசிய கூட்டு: விஜயகாந்த்
சென்னை:ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக திமுகவுக்கவும், அதிமுகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலங்களவைத் தேர்தல் போட்டியில்லாமல் நடைபெற வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறி வருவது புதிராக உள்ளது. போட்டியிருந்தால் கட்சி மாறி ஓட்டு போட நேரிடும், குதிரை பேரம் நடக்கும், அதற்கு இடம் தரக் கூடாது என்று கருணாநிதி கூறுவது வியப்பாக உள்ளது.
கட்சி மாறி ஓட்டு போடப்பட்டால், தனது குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், தோற்கடித்து விடுவார்கள் என பயப்படுகிறாரா அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்தவர் வெற்றி பெற முடியாமல் போய் விடும் என்று பயப்படுகிறாரா.
சட்டசபையில் அதிமுகவுக்கும், மதிமுகவுக்கும் சேர்த்து 66 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி வெற்றி பெற 33.29 வாக்குகள் தேவை. இரண்டு பேர் வெற்றி பெற 67 வாக்குகள் தேவை. எனவே அதிமுகவின் 2வது வேட்பாளர் வெற்றி பெற தேமுதிகவின் வாக்கு கட்டாயம் தேவை.
அதிமுகவுக்கு தேமுதிகவின் ஆதரவே கிடைத்தே ஆக வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கு வழியில்லை. இந்த நிலையில் தானாக முன்வந்து அதிமுகவுக்கு திமுக ஆதரவு கொடுக்க வேண்டியதன் ரகசியம் என்ன.
அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு கிடைத்து விடக் கூடாது என்ற காரணத்தாலா அல்லது தனது ஓட்டை ஜெயலலிதாவுக்குத் தந்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பொது எதிரியாக தேமுதிகவை மாற்ற கருணாநிதி நினைக்கிறாரா.
அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெறட்டும் என்று கருணாநிதியே சொல்லியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்கும் ஜெயலலிதா, இதுதான் நியாயமான தேர்தல், இப்படித்தான் நடக்க வேண்டும், முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது என்று பாராட்டுகிறார்.
இதிலிருந்ேத இரு கட்சிகளும் தங்களது பொது எதிரியாக தேமுதிகவைக் கருதுகின்றன என்பது தெரியும்.
கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகம் நாடறியும். சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலையே ஜெயலலிதா புறக்கணித்தார். ஆனால் இவர்களுக்கு ஆதாயம் என்றால் சேர்ந்து கொள்வார்கள், இல்லாவிட்டால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வார்கள், ஊரைக் கூட்டி ஒப்பாரி வைப்பார்கள்.
எதிரும் புதிருமாக சண்டையிட்டு நாடகமாடுவார்கள். தமிழக மக்களை ஏமாற்றுகிற அரசியல் நாடகம் நடத்துவார்கள். மக்களை ஏமாற்ற இவர்கள் கையாளுகிற வித்தைகளே இவை.
இன்றைக்கு குதிரை பேரம் நடக்கும் என்று கவலைப்படும் கருணாநிதி, அன்று உள்ளாட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் மாபெரும் குதிரை பேரம் நடந்ததே அதற்கு என்ன சொல்கிறார்.
உளுத்துப் போன இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தமிழகத்தை மீட்டு புதிய அரசியலை தருவதே தேமுதிகவின் தலையாய கடமை என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
முக்குலத்தோர் வாக்குகள்.. 6 மாவட்டங்களில் திமுகவின் மைக்ரோ பிளான்.. ஓபிஎஸ் மூலமாக அதிமுகவுக்கு செக்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
என்டிஏவுக்கு தமிழ்நாடே 'நோ'.. நான் இருக்கும் வரை பாஜகவுக்கும் நோ எண்ட்ரி.. அதிர விட்ட மு.க.ஸ்டாலின்! -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications