பள்ளி பஸ் மீது லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே பள்ளிப் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த அறுபது மாணவர்களும், ஆசிரியர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
பின்னர் மணப்பாடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து தூத்துக்குடி அருகே சுப்ரமணியபுரம் பகுதியில் வந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தேனி நோக்கி சென்ற லாரி மோதியது.
இதில் நிர்மலா (15), அபிஷா (13) ஆகிய இரு சிறுமிகளும், லாரி டிரைவர் முத்துராஜாவும் (50) சம்பவ இடத்திலேயே இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications