சிவகங்கை குண்டு வெடிப்பு: தொடர்ந்துபோராட்டம்-ஆயுத போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:சிவகங்கையில் நகராட்சி தலைவரை காரில் குண்டு வைத்து கொன்றவர்களை கைது செய்யக் கோரி அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பேருந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகங்கை நகராட்சி தலைவர் முருகன் கடந்த 29ம் தேதி காரில் குண்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் 2 திமுக கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் குண்டு தயாரித்து கொடுத்து பாலா என்கிற என்ஜீனியரையும் தேடி வந்தனர்.

இந் நிலையில் திமுக கவுன்சிலர் மந்தகாளையும், என்ஜீனியர் பாலாவும் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் 6ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதற்கிடையில் முருகனின் ஆதரவாளர்கள் மற்ற கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை-மானாமதுரை சாலையில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி கொலையாளிகளை கைது செய்யக் கோரி கோஷமிட்டப்படி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இத்தகவலை அறிந்த சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகளை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவர் எனவும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+