லண்டன் லிங்கன்-இன் அமைப்பின் உறுப்பினராகதலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமனம்
டெல்லி: லண்டனில் உள்ள புகழ் பெற்ற லிங்கன்-இன் அமைப்பின் கெளரவ உறுப்பினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள இன்னர் டெம்பிள், லிங்கன்-இன், கிரேஸ்-இன், மிடில் டெம்பிள் ஆகிய 4 அமைப்புகளும் மிகவும் புகழ் பெற்றவை ஆகும். இந்த அமைப்புகளில் சட்ட நிபுணர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருப்பார்கள்.
![]() |
இந்தியர்களும் அவ்வப்போது இதில் இடம் பெறுவது வழக்கம். தற்போது அந்தப் பெருமை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
இதில் லிங்கன்-இன் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பாலகிருஷ்ணன். இந்த அமைப்பில் கெளரவ உறுப்பினராக சேரும் 3வது இந்தியர் என்ற பெருமை பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது.
இவர் தவிர உச்சநீதிமன்ற நீதிபதி சுஜாதா வி.மனோகர், அட்டர்னி ஜெனரல் மிலன் கே.பானர்ஜி ஆகியோரும் இந்த அமைப்பின் கெளவர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் லண்டன் சென்றிருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன், லிங்கன்-இன் அமைப்பில் நீதித்துறையின் சுதந்திரம் என்ற பெயரில் உரை நிகழ்த்தினார்.
தற்போது அந்த அமைப்பின் கெளரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications