சட்டக் கல்லூரிகள் முன்பு அதிமுக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான இட மாறுதலை மீண்டும் அமல்படுத்தக் கோரி அதிமுக மாணவர் அணி சார்பில் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில், நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான இட மாறுதலை திமுக அரசு ரத்து செய்து விட்டது.

இதனால் ஏழை, மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சட்டக் கல்லூரிகள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று சட்டக் கல்லூரிகள் முன்பு பெரும் திரளான மாணவர் அணியினர் மற்றும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை சட்டக் கல்லூரி முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில மாணவர் அணி செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். சென்னையில் மகாராஜன், செங்கல்பட்டில் பாலகுமார், சேலத்தில் சக்திவேல், கோவையில் நாசர், திருச்சியில் பூபதி, நெல்லையில் ஜெரால்டு ஆகியோர் தலைமை தாங்கினர்.

நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் பாளை ஜவஹர் திடலில் இன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+