மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம்;8 கேரள பெண்கள் கைது-டாக்டர் எஸ்கேப்!
சென்னை:சென்னை மேற்கு சிஐடி நகரில் ஆயுர்வதேச சிகிச்சை நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதியை நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் தலைமறைவானார். அவரது சிகிச்சை மையத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 8 கேரள பெண்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்ன மேற்கு சிஐடி நகரில் ஆயுஷ் ஸ்பர்ஷா என்ற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தை கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பால் ஜோஸ் என்பவர் நடத்தி வந்தார்.
ஆனால் இந்த மையத்தில் ஆயுர்வதே சிகிச்சை, மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாகவும், இவ்வளவு நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என்ற பெயரில் கன ஜோராக விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து தென் சென்னை இணை ஆணையர் துரைராஜே நேரடியாக களம் இறங்கினார். அவரே அந்த மையத்திற்குப் போன் செய்தார். மசாஜ் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார். அப்போது மையத்திலிருந்து பேசிய பெண், மஜாஜ் குறித்து கூறினார். பின்னர் மெதுவாக அந்த மேட்டருக்கு வந்துள்ளார்.
அரை மணி நேரத்திற்கு ஜாலியாக இருக்க வேண்டுமானால் ரூ. 1,500 கொடுத்தால் போதும் என்று ஆரம்பித்து ரேட் பட்டியலை இணை ஆணையரிடம் வாசித்தார்.
அந்தப் பெண்ணிடம் பேசி விட்டு போனை வைத்த துரைராஜ் போலீஸ் படையுடன் அங்கு சென்றார். ஆயுர்வேத மையத்தை சுற்றி வளைத்த போலீஸ் படை அங்கு ேசாதனை நடத்தியது.
அப்போது சந்தியா, பிரியா, ரேவதி, ஜெஸ்ஸி, ஜாஸ்மின், லட்சுமி, சுனிதா, ஸ்ரீகலா ஆகிய எட்டு கேரள பெண்கள் வாடிக்கையாளர்களுடன் ஜாலியாக இருந்தது தெரிய வந்தது. அத்தனை பேரையும் போலீஸார் கைது செய்தனர். தகவல் தெரிந்ததும் பால் ஜோஸ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அவருடைய உதவியாளர்களாகவும், வாடிக்கையாளர்களை மையத்திற்கு அழைத்து வரும் விபச்சார புரோக்கர்களாகவும் செயல்பட்டு வந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அந்த மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications