வேலையில்லா பட்டதாரிகளுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை:வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வழங்கி வரும் வேலை வாய்ப்பு நிவாரண உதவித் தொகை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு சிறப்பு திறன் பயிற்சி கொடுக்கவுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு உதவியுடன் வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. சென்னை மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி 10 அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வேலை வாய்ப்பற்றோர் உதவி தொகை பெறுபவர்கள் மட்டும்தான் இதில் கலந்து கொள்ள முடியும். இதில் கலந்து கொள்ள எஸ்.சி, எஸ்.டி இனத்தவர்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 ஆகும்.
இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அரசு ஐடிஐ-ல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் பயிற்சிக்கு ஏற்ப தினமும் 3 மணி நேரம் வீதம் மொத்தம் 60 மணி நேரத்திலிருந்து 320 மணி நேரம் வரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் கொடுக்கப்படும். இந்த பயிற்சியில் சேருபவர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு வேலைவாய்ப்பு உதவித் தொகை தொடர்ந்து கொடுக்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வரும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படாது.
இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிவாரண உதவி தொகை பெறுவதற்கான ஆதாரங்களோடு வரும் ஆகஸ்ட் 23 மற்றும் 24ம் தேதிகளில் காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள அரசினர் ஐடிஐயில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜெயா கூறியுள்ளார்.
-
5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம்: பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications