சேலம் கோட்ட அறிவிப்பு வரும் வரை போராட்டம்
கோயம்புத்தூர்:சேலம் ரயில்வே கோட்டம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வரை கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்களை தொடர்ந்து மறியல் செய்வோம் என்று போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சேலம் ரயில்வே கோட்டம் பிரச்சனையில், கேரள அரசை எதிர்த்து இன்று காலை முதல் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன்படி இன்று காலை 5 மணிக்கே போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை ரயில் நிலையத்திற்கு மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் ரயில் நிலையத்திற்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். நேரம் செல்ல செல்ல அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ரயில் மறியல் போராட்டத்திற்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் நிருபர்களிடம் ராமகிருஷ்ணன் கூறியதாவது
ரயில் மறியல் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து கோவையில் இருந்து கண்ணணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படவில்லை. கோவையிலிருந்து கேரளாவுக்கு எந்த எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்லவில்லை. அதே போல் வெளியூரிலிருந்து கோவைக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்ட அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முறைப்படி அறிவிக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடக்கும். இதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார் ராமகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications