பெண்ணுக்கு கல்யாண ஆசை காட்டிமோசம் செய்த ஆசிரியர் கைது!
திருநெல்வேலி:கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணைக் கைவிட்ட ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பலபத்திர ராமபுரம் பள்ளிக் கூடம் தெருவைச் சேர்ந்த புதியவன் என்பவரின் மகள் ராசாத்தி. இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாலன் என்பவர் திருமணம் செய்வதாக ஆசை காட்டி பழகியுள்ளார்.
அதை நம்பிய ராசாத்தி, பாலனுடன் நெருக்கமாக பழியுள்ளார். இந்த நெருக்கம் பலமுறை தனிமையில் இனிமை காண வைத்துள்ளது.
இந்நிலையில் பாலனுக்கு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் கோவை சென்று விட்டார். ஆசிரியர் வேலை கிடைத்த பின்னர் ராசாத்தியை மறந்து விட்டார் பாலன். ஆணால் எளிதில் மறந்து விட முடியும். ஆனால் பெண்ணால் அப்படி முடியாதே, தன்னை திருமணம் செய்யக் கோரி ராசாத்தி பாலனிடம் பல தடவை கேட்டுள்ளார்.
ஆனால் படிக்காத உன்னை எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி கைகழுவி விட்டார் பாலன். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசாத்தி, ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.
ராசாத்தி கொடுத்த புகாரின் பேரில் ஆசை காட்டி பெண்ணை மோசம் செய்த ஆசிரியர் பாலனை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications