Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோப் கார் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:பழனியில் ரோப் கார் அறுந்து விழுந்த விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் நடந்த ரோப் கார் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பெரும் வேதனை அடைந்த முதல்வர் கருணாநிதி, சம்பவ இடத்துக்கு அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோரை அனுப்பியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 நிவாரண உதவி வழங்கவு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து ஆய்வு செய்வதற்கு வல்லுனர் குழு அனுப்பபட்டுள்ளதாகவும், அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், அரசு மேல் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+