ஆக்ராவில் பயங்கர வன்முறை- ஊரடங்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:லாரி மோதி 4 வாலிபர்கள் கொல்லப்பட்டதையடுத்து ஆக்ராவில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட லாரிகள் கொளுத்தப்பட்டதோடு ஏராளமான கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நகரில் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
![]() |
இஸ்லாமியர்களின் புனித இரவான ஷபே-இ-பாராத்தையொட்டி நேற்றிரவு பேரணி நடந்தபோது அந்த வழியாக மிக வேகமாக வந்த லாரி பேரணியில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் 4 வாலிபர்கள் பலியானர். இதையடுத்து அந்த வழியே வந்த 20க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும் நிலைமையை கட்டுப்படுத்த வந்த போலீசார் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. போலீஸ் வாகனங்களுக்கும் தீயணைப்பு வண்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டன. சில இடங்களில் போலீசார் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் ெகாண்டு வரப்பட்டுள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications