சிறுமியை பலாத்காரம் செய்த டாக்டர்:மருத்துவமனைக்கு தீ வைப்பு

Subscribe to Oneindia Tamil

நகரி:பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுமியை மானபங்கம் செய்த டாக்டரை தப்பியோடிவிட்டார். அவரது மருத்துவமனைக்கு பொது மக்கள் தீ வைத்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்திகுட்கூர் என்ற கிராமத்தை சேர்ந்த டாக்டர் மல்லையா.

இவரது அண்டை வீட்டில் வசிக்கும் ராமண்ணா என்பவரின் 13 வயது மகள் அடிக்கடி மல்லையா வீட்டுக்கு விளையாடச் செல்வது வழக்கம்.

நேற்று தனது வீட்டுக்கு வந்த அந்த சிறுமியை தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மல்லையா அவளுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் தந்தார்.

அதில் மயங்கிய சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மயக்கம் தெளிந்த பின் பாரதி வலியில் அலறினாள். இதையடுத்து அவளை கட்டிப் போட டாக்டர் முயன்றுள்ளார். அவள் தப்பியோடி வெளியே வந்து உதவி கோரி கத்தினாள். இதையடுத்து டாக்டர் தப்பியோடிவிட்டார்.

அப் பகுதி மக்கள் சிறுமியிடம் விசாரித்தபோது தான் டாக்டரின் சித்திரவதை தெரியவந்தது. இதையடுத்து பொது மக்கள் அந்த மருத்துவமனைக்கு தீ வைத்தனர்.

தப்பியோடிய டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+