தூத்துக்குடியில் மாயமான 3 மாணவிகள் சென்னையில் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:தூத்துக்குடியில் மாயமான 3 பள்ளி மாணவிகளும் சென்னையில் மீட்கப்பட்டுள்ளனர்.
![]() |
தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்த கோதரின் மகள் சையத் பிஷ்மி நிஷா. அதே தெருவைச் சேர்ந்த காதர் ஹூசேனின் மகள் நஸ்ரின். இவர்களது தோழி அண்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்த குணசேகரனின் மகள் இருதயரோஸ் சியாமளா.
![]() |
சியாமளாவும், நிஷாவும் வி.இ. ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 2வும், நஸ்ரின் ப்ளஸ் 1ன்னும் படித்து வந்தனர்.
![]() |
சமீபத்தில் நடந்த இடைத் தேர்வில் நிஷா 2 பாடத்தில் மார்க் குறைவாக வாங்கியதால் தந்தை கோதர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிஷா இது குறித்து தோழிகளிடம் கூறி அழுதுள்ளார்.
கடந்த 25-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய 3 பேரும் நிஷா வீட்டில் படித்துக் கொண்டிருந்தனர். பின்னர் திடீரென மாயமாகி விட்டனர். பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்காததால் இது குறித்து கோதர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து, பழனிச்சாமி ஆகியோர் தனிப்படை அமைத்து 3 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று மாணவிகளும் சென்னை மேடவாக்கத்தில் உள்ள நிஷாவின் அத்தை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மதுரை, விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் சுற்றி விட்டு கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் சென்னைக்குச் சென்றுள்ளனர்.















Click it and Unblock the Notifications