அமைச்சர் மகன் வீட்டில் ரூ. 2 லட்சம்br/மாயம் - டிரைவரைத் தேடும் போலீஸ்
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலனின் மகன் வீட்டில் ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தைத் திருடியதாக சந்தேகப்படும் கார் டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சுப.தங்கவேலனின் மகன் சுப.த.செந்தில்குமார். இவர் பரமக்குடி நகர திமுக இளைஞரணி செயலாளராகவும் இருக்கிறார். இதுதவிர செல்போன் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார்.
வைகை நகர் பகுதியில் வீடு உள்ளது. இவரிடம் கார் டிரைவராக இருப்பவர் வெங்கடேசன். இவரது வீடு பாரதி நகரில் உள்ளது.
கடந்த 20ம் தேதி செந்தில்குமார் தனது வீட்டில் ரூ. 2 லட்சம் பணத்தை வைத்திருந்தார். அன்றைய தினம் பணம் காணாமல் போனது. அன்று முதல் டிரைவர் வெங்கடேசனையும் காணவில்லை.
இதையடுத்து எமனேஸ்வரம் போலீஸில் புகார் செய்தார் செந்தில்குமார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications