தூத்துக்குடி: 4 இலங்கை தமிழ் மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி:

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நான்கு இலங்கைத் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடலோர காவல் படையின் ரோந்துக் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது மணப்பாடு கலங்கரை விளக்கம் அருகே ஒரு படகு இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் படகை நெருங்கிய கடலோரக் காவல் படை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் படகில் இருந்த நான்கு பேரும் இலங்கை மீனவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தப் படகை மீட்ட கடலோரக் காவல் படைக்கு கரைக்குக் கொண்டு வந்தது. படகில் இருந்தவர்கள் அந்தோணி சுனில், சில்வின் ஜஸ்டீனியஸ், ஜோ கிளீனஸ், பிரான்சிஸ் நிமல் என்பது தெரிய வந்தது. அவர்கள் நான்கு பேரும் தமிழ் மீனவர்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 6ம் தேதி நீர்க்கொழும்பு பகுதியிலிருந்து அவர்கள் மீன் பிடிக்க படகில் கிளம்பியுள்ளனர். நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்துள்ளது. இதனால் படகு போன போக்கில் அவர்களும் வந்துள்ளனர். இப்படியாக அது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளது.

வழி தவறி வந்தவர்கள் என்றாலும் கூட அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக நான்கு தமிழ் மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகு, 50 கிலோ மீன்கள் மற்றும் மீன்பிடி வலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+