வடிவேலு - விஜயகாந்த் ரசிகர்கள் மோதல்br/இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்
சென்னை:
நடிகர் வடிவேலுவுக்கும், விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த விருகம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் வடிவேலுவின் அலுவலகம் முன்பாக விஜயகாந்த் ரசிகர்கள் கார்களை நிறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக அவர்களுக்கும், வடிவேலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வடிவேலு அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, வடிவேலுவின் அலுவலகம் மீதும் கல் வீசப்பட்டது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக வடிவேலு மீதும், விஜயகாந்த் ஆதரவாளர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விஜயகாந்த் வீட்டு வாட்ச்மேன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
வடிவேலு மீதும் கொலை மிரட்டல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் தரப்பினரைக் கைது செய்தது போல, வடிவேலுவும் கைது செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அழகேசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
இதற்கிடையே, வடிவேல் தரப்பில் முன்ஜாமீன் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications