வகுப்பறை கட்ட வந்த பணத்தை 'கபளீகரம்' செய்த ஆசிரியைக்கு வலை!
கரூர்:
பள்ளிக்கு கட்டடம் கட்ட வழங்கப்பட்ட ரூ. 2 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டுத் தலைமறைவான தலைமை ஆசிரியைக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கருர் மாவட்டம் தோகமலையை அடுத்த கம்பிளியாம்பட்டியில் ஊராட்சி துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்தவர் கலா.
இவர் தற்போது கட்டளை என்ற கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தோகமலையை அடுத்த கம்பிளியாம்பட்டியில் ஊராட்சி துவக்கப்பள்ளியில் பணியாற்றிய போது புதிய வகுப்பு அறைகள் கட்ட ரூ 2 லட்சத்து 200 க்கான காசோலையை கல்வி குழு மற்றும் ஊராட்சி தலைவர் ராசு உள்ளிட்டோர் வழங்கினர்.
ஆனால் கலா, அந்தக் காசோலையை திருத்தி தனது பெயரில் பணத்தை எடுத்துள்ளார். இந்த மோசடி குறித்து தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கலா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications