2 கோவில் காவலாளிகளை கொடூரமாக கொன்று நகைகள் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் என்ற ஊரில் உள்ள காளி கோவிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரு காவலாளிகளை கொடூரமாகக் கொன்று விட்டு கோவில் நகைகளை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
![]() | ![]() |
நேற்று முன்தினம் இரவு இருவரும் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை கோவில் ஊழியர்கள் கோவில் நடை திறக்க வந்தனர். அப்போது கோவில் கதவு உள் பக்கமாக மூடப்பட்டிருந்தது. கோவில் சுவரில் ஒரு பெரிய கயிறு தொங்கிக் கொண்டிருந்தது.
அதன் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இரு காவலாளிகளையும் இரும்புக் கம்பிகளால் சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து அதிலிருந்த நகை, பணத்தையும் திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்தக் கோவிலில் கொள்ளைச் சம்பவம் நடப்பது இது 3வது முறையாகும். ஆனால் இந்த முறை இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு தனிப்படைகள் அமைத்து போலீஸார் கொள்ளையர்களையும், கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications