கருணாநிதி மீது வழக்கு-உபி நீதிமன்றம் தள்ளுபடி: மும்பையிலும் வழக்கு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
ராமர் குறித்து அவமரியாதையாகப் பேசியதாக முதல்வர் கருணாநிதி மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கருணாநிதி மீது நாடு முழுவதும் 1,000 இடங்களில் வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா அறிவித்திருந்தார்.
இந் நிலையில் விஎச்பி சார்பில் மும்பை போரிவெலி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது பின்னர் தெரியவரும்.
இந் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நீதிமன்றத்தில் கருணாநிதி மீது வழக்கு தொடரப்பட்டது.
ஆனால், அதை நீதிபதி சைலேஷ்குமார் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துவிட்டார்.












Click it and Unblock the Notifications