நெல்லை பல்கலையில் பட்டங்கள் வழங்கிய பர்னாலா
திருநெல்வேலி:
நெல்லை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 182 பேருக்கு தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பட்டங்கள் வழங்கினார்.
நெல்லை பல்கலைக்கழக 15வது பட்டமளிப்பு விழா மற்றும் ரூ.4.50 கோடியில் புதிய ஆடிட்டோரியம் திறப்பு விழாக்களில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா பங்கேற்றார்.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பர்னாலா தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பல்கலை கழகம் வந்தார். கவர்னர் பர்னாலாவை நெல்லை மேயர் எல்.ஏ சுப்பிரமணியன், கலெக்டர் பிரகாஷ், மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, துணைவேந்தர் சிந்தியா பாண்டியன், துணை மேயர் முத்துராமலிங்கம், மாநகராட்சி கமிஷனர் மோகன் பதிவாளர் செல்லத்துரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் பல்கலைகழகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பீ்ட்டில் கட்டப்பட்ட ஆடிட்டோரியத்தை பர்னாலா திறந்து வைத்தார். தொடர்ந்து நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பர்னாலா தலைமை வகித்து 82 பேருக்கு பி.எச்.டி பட்டமும், 17 பேருக்கு எம்.பில் பட்டமும், 45 பேருக்கு முதுநிலை பட்டமும், 38 பேருக்கு இளநிலை பட்டமும் உள்ளிட்ட 182 பேருக்கு பட்டங்கள் மற்றும் தங்க பதங்கங்கள் வழங்கினார்.












Click it and Unblock the Notifications