இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில் உள்ளது
திருநெல்வேலி:
இந்தியாவிலேயே மிகப்பெரிய புலி களக்காடு மலையில்தான் உள்ளது என்று டேராடூன் வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் தெரிவித்தார்.
களக்காடு-முண்டந்துறை வனப்பகுதியில் புலிகள் உள்ளதா இல்லையா என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நிலவி வந்தது. இதற்காக வனப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கேமராக்கள் வைக்கப்பட்டு கண்காணித்ததில் தற்போது புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டேராடூனில் உள்ள வன உயிரின மைய ஆராய்ச்சியாளர் கே.சங்கர் நேற்று நெல்லை வந்தார். அவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்ததில் கூறியதாவது,
இந்தியா முழுவதும் புலிகள் வாழும் பகுதிகளில் கடந்த 2005ம் ஆண்டு முதல் புலிகளின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுக்கும் பணியை தொடங்கினோம். இந்த கணக்கெடுப்பு பணியை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்பட்டது.
இந்த அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் மயிலாறு, கன்னிகட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 80 சதுர கிலோ மீட்டர் பரப்பரளவை தேர்ந்து எடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் பணியை தொடங்கினோம்.
தற்போது 2ம் கட்ட பணிகள் முடிந்து 3ம் கட்ட பணியான காமிரா மூலம் கண்காணித்து புலிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறோம். இதற்காக நாங்கள் இப்பகுதியில் தேர்ந்தெடுத்துள்ள 80 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதியில் 40 அதிநவீன காமிரக்களை பொருத்தி உள்ளோம். புலிகள் நடமாட்டம் அதிகம் உள்ள சில பகுதிகளில் மேலும் 22 காமிரக்களை வைத்துள்ளோம்.
இவ்வாறு தொடர்ச்சியாக படம் எடுத்ததில் களக்காடு-முண்டன்துறையில் எங்களுடைய ஆராய்ச்சி பகுதியில் 8 வயது உள்ள ஆண் புலி ஒன்று நடமாடுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது எங்கள் போட்டோவில் பதிவாகி உள்ளது.
இந்த புலி மிகப் பெரிய அளவில் கம்பீரமாக உள்ளது.
மிகவும் ஆரோக்கியமாக, ஆஜானபாகுவாக இருக்கிறது. நான் பார்த்த வகையில் இந்தியாவில் மிகப்பெரிய புலி இதுவாகத்தான் இருக்கும்.
இது தவிர 4 சிறுத்தை புலிகளும் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 3 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் உள்ளன.
ஆய்வுப்பகுதி அல்லாத இடமான திருக்குறுக்குடி ஏரியா வீரப்புலி பீட் பகுதியில் ஒரு பெண் புலி இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் காமிராவில் இடம் பெற்று உள்ளது.
இந்த புலியை தவிர 6 சிறுத்தை புலிகளும் இங்கு உள்ளது. அதில் 5 ஆண் சிறுத்தைகளும், 1 பெண் சிறுத்தையும் அடங்கும்.
2005ம் ஆண்டில் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 29 புலிகள் இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை கூடி இருக்கிறதா என்பதை எங்களின் கணக்கெடுப்பு பணி முடிந்தபின்னர் தான் தெரியவரும்.
களக்காடு பகுதியில் இன்னும் 2 வாரங்களில் எங்கள் பணி முடிவடைந்து விடும். வருகிற டிசம்பர் மாதம் எங்களது அறிக்கையை கொடுக்க இருக்கிறோம்.
4 கட்ட பணி என்பது மிகப் பெரிய பொருட்செலவாகும். அந்த பணிக்கு களக்காடு-முண்டன்துறை பகுதி முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு மத்திய அரசு ரூ. 4 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மக்கள் விலங்குகளை அதிகம் நேசிக்கிறார்கள். தென்னிந்தியாவில் விலங்குகளை வேட்டையாடுவது இல்லை என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications