கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 25 பேருக்கு 7 ஆண்டு சிறை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று 25 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 10 பேருக்கு 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று 35 பேருக்கு தண்டனை விவரத்தை நீதிபதி உத்தராபதி அறிவித்தார். 25 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் 10 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் வரும் 10ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும் மற்ற 7 பேருக்கான தண்டனை விவரம் வரும் 15ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications